வேலை வேண்டுமா..? இந்திய விமானப் படையில் ‘குரூப் சி’ வேலை
இந்திய விமானப் படையில் ‘குரூப் சி’ பிரிவின் கீழ் வரும் சிவிலியன் ஸ்டாப், குக், மெஸ் ஸ்டாப் உள்ளிட்ட 22 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட பணியிடங்களுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். ஜனவரி.27-ல் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.
மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். ஜனவரி.27-ல் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment