வேலை... வேலை... வேலை... இந்திய விமான நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்’ வேலை

air india flight
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் வடக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலங்களில் காலியாக உள்ள 500 சேவை பணியாளர்கள் (கேபின் குரூவ்) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 500
மண்டல வாரியான காலியிடங்கள் விவரம்:
வடக்கு மண்டலம்: தில்லி - 450 
மேற்கு மண்டலம்: மும்பை - 50
ஆண்களுக்கு 163 பணியிடங்களும், பெண்களுக்கு 337 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 12.03.2018-ஆம் தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2018 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி